| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 3. யாழ் பெற்றது |
| |
விருத்தி கொடுத்துத் திருத்தகு
செய்தொழிற் 25 றச்ச
மாக்களொடு தலைநின்று
நடாஅம்
அச்ச மாக்களை யடையப்
போக்கிப்
பத்திரா பதியின் படிம
மிடூஉஞ்
சித்திர காரருஞ் செல்கெனச்
சொல்லி
ஆராக் கவலையி னதுபணித் ததற்பின்
|
| |
(இதுவுமது)
24 - 29:
திருத்தகு........................பின்
|
| |
| (பொழிப்புரை) அழகு தக்கிருக்கின்ற செய்தொழிலையுடைய
தச்சர்களையும், அவ்விடத்தே நின்று வினையை நடத்தும் தன்பால் அச்சமுடைய பிற
தொழிலாளர்களையும் நிரம்ப விடுத்துப் பின்னரும் அப்பத்திராபதியின் உருவத்தை
எழுதுகின்ற ஓவியப்புலவர்களையும் செல்லுங்கோள் என்று விடுத்து முற்றாத கவலையினாலே
அச்செயலைப் பணித்ததன் பின்னர்; என்க.
|
| |
| (விளக்கம்) திருத்தகு செய்தொழில் - அழகால் தகுதிபெற்ற
செயலையுடைய தொழில் என்றவாறு. எனவே கலைத்தொழில் என்றாயிற்று. தச்சமாக்கள் -
தச்சர். நடாஅம் - நடத்துகின்ற. அச்சமாக்கள் - தன்பால் அச்சமுடைய தொழிலாளர்.
அடைய - நிரம்ப. படிமம் இடூஉம் - வடிவத்தை எழுதும். ஆராக்கவலை - நுகர்ந்து முற்றாத
கவலை. அது - அச்செயலை.
|