பக்கம் எண்:575
|
|
உரை | | 4. வத்தவ காண்டம் | | 3. யாழ் பெற்றது | | சதுவகை வேதமு மறுவகை
யங்கமும்
விதியமை நெறியிற் பதினெட்
டாகிய
தான விச்சையுந் தான்றுறை
போகி 65
ஏனைக் கேள்வியு மிணைதனக்
கில்லவன்
கார்வளி முழக்கி னீர்நசைக்
கெழுந்த
யானைப் பேரினத் திடைப்பட் டயலதோர்
| |
(இதுவுமது)
62 - 67 : சதுவகை.............இடைப்பட்டு
| | (பொழிப்புரை) நான்குவகை வேதங்களையும் ஆறுவகை அங்கங்களையும்
விதிகள் அமைந்த முறையினையுடைய பதினெட்டிடங்களையுடைய வித்தைகளையும் பயின்று முதிர்ந்து
ஏனைய நூற் கேள்வியினும் தனக்கு நிகரற்றவனும் ஆகிய அவ்வருஞ்சுகன் வரும்வழியிலே
நீர்வேட்டு எழுந்த முகிலும் காற்றும் போல முழங்கா நின்ற ஒரு பெரிய
யானைக்கூட்டத்தினகப்பட்டுக் கொண்டு; என்க.
| | (விளக்கம்) சதுவகை - நால்வகை. துறைபோகி - கற்று
முதிர்ந்து. அங்கம் - உறுப்பு நூல்கள். அவை, சிக்கை, கற்பம், வியாகரணம், நிருத்தம்,
சந்தோபிசிதம், சோதிடம் என்பன. விச்சை - வித்தை, வித்தைத் தானம்
பதினெட்டென்பர் வடநூலார். நீர் நசைக்கு - நீர் வேட்கை
காரணமாக.
|
|
|