பக்கம் எண் :

பக்கம் எண்:576

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
              யானைப் பேரினத் திடைப்பட் டயலதோர்
              ...................................................
              இமையோ ருலகிற் கேணி யாகிய
              கான வேங்கைக் கவர்சினை யேறி
  70          அச்ச மெய்தி யெத்திசை மருங்கினும்
              நோக்கின னருகே யாக்க மின்றி
 
        (அருஞ்சுகன் வேங்கை மரத்திலேறி நோக்குதல்)
              67 - 71: அயலது.........நோக்கினன்
 
(பொழிப்புரை) பக்கத்திலே நின்ற (...........) வானுலகத்திற்கு வைத்த ஓர் ஏணி போன்று உயர்ந்த வேங்கை என்னும் கரட்டுமரத்தினது கவர்த்த கிளையின்கண் ஏறிப் பெரிதும் அச்சமெய்தி நான்கு திசைகளினும் நோக்கினனாக; என்க
 
(விளக்கம்) இமையோர் - தேவர். இமையோருலகிற்கு ஏணியாகிய என்றது வானுற உயர்ந்து நின்ற என்றவாறு. கவர்சினை, வினைத்தொகை.