உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
3. யாழ் பெற்றது |
|
கொடைப்பெரு
வேந்தன் குளிர்ந்தன
னாகியென் படைப்பரும்
பேரியாழ்ப் பண்ணொலி
யிதுவென ஓர்த்த செவியன்
றேர்ச்சியிற் றெளிந்து
மெய்காப் பாளனை யவ்வழி யாய்வோன்
|
|
(இதுவுமது)
116 - 119 : கொடை..............ஆய்வோன
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட வள்ளற் பெருமானாகிய அவ்வுதயணவேந்தன்
பிறரால் இயற்றுதற்கரிய என்னுடைய பேரியாழாகிய கோடபதியினது பண்ணொலியே இஃது என்று
தன் எஃகுச் செவியால் ஓர்ந்து தன் தேர்ச்சியினாலே அதுவே என்று துணிந்து அவ்வுண்மையை
ஆராய்ந்தறிந்துகொள்ளும் பொருட்டுத் தன் மெய்காப்பாளனை அவ்விடத்தே
ஆராய்கின்றவனை; என்க.
|
|
(விளக்கம்) கொடை - வண்மை. வேந்தன் : உதயணன்.
படைப்பரும்யாழ் - இயற்றுதற்கரிய யாழ். தெய்வயாழாகலின் இங்ஙனம் கூறினன்.
மெய்காப்பாளன் - தன் உடம்பைப் பாதுகாக்கும்
இளைஞன்.
|