உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
3. யாழ் பெற்றது |
|
120 மருங்கறைக் கிடந்த வயந்தக
குமரன் விரைந்தனன்
புக்கு நிகழ்ந்ததை
யென்னெனக் கூட்டமை
வனப்பிற் கோட
பதிக்குரல் கேட்டனன்
யானுங் கேண்மதி
நீயும் விரைந்தனை
சென்றுநம் மரும்பெறற் பேரியாழ் 125
இயக்கு மொருவனை யிவட்டர னீயென
|
|
(இதுவுமது)
120 - 125 : மருங்கு....................என
|
|
(பொழிப்புரை) அப்பொழுது பக்கத்தேயுள்ள அறையில் பள்ளி
கொண்டிருந்த வயந்தககுமரன் எழுந்து விரைந்து வந்து உதயணன் அறையில் புகுந்து, "பெருமானே !
இப்பொழுது இங்கு நிகழ்ந்தது யாது?" என்று வினவாநிற்ப, அவனைக்கண்ட உதயணன், "நண்ப!
இங்கு இசைக்கும் இந்த யாழிசையைக் கேள். இவ்விசை பல்வகை உறுப்புக்களும்
சேர்ந்தமைந்த அழகினையுடைய நமது கோடவதியின் இன்னிசையே காண். யான் அதனைக் கேட்டு
நன்கு அறிந்து கொண்டேன். நீயும் கேட்டு அறிந்துகொள்! நீ இப்பொழுதே விரைந்து சென்று
நமது அரும் பெறல் பேரியாழினை இயக்குபவனை இங்கு அழைத்து வருவாயாக" என்று கூற;
என்க.
|
|
(விளக்கம்) உதயணன் மெய்காப்பாளன் எங்குளன் என்று ஆங்குள்ள
பணியாளரை வினவி ஆராயும் அரவங்கேட்டு வயந்தகன் விரைந்து வந்து இங்கு நிகழ்ந்தது என்ன
என்று வினவுகின்றான் என்பது கருத்து. மருங்கறை - பக்கத்தேயுள்ள அறை. கூட்டமை - பலவகை
உறுப்புக்களும் சேர்தலமைந்த. வனப்பு - அழகு. கேண்மதி - மதி : முன்னிலையசை.
இயக்கு மொருவனை என்றது இயக்குபவனை என்றவாறு. தரல் - அழைத்து
வருக.
|