(விளக்கம்) பகைகொள் மன்னர் - விரிசிகன் முதலிய
சங்கமன்னர் எண்மரும். ஒன்றி - தம்முட் கூடி எனினுமாம். 'இழிந்த மாக்களொடின்ப
மார்தலின் உயர்ந்த மாக்களொ டுறுபகை இனிது' என்னும்
இத்தொடரொடு.
'பேதை பெருங்கெழீஇ நட்பி
னறிவுடையா ரேதின்மை கோடி யுறும்' (குறள்.
816)
எனவும்.
'நகைவகைய ராகிய நட்பிற்
பகைவராற் பத்தடுத்த கோடி யுறும்' (குறள்.
817)
எனவும்.
'இசைந்த சிறுமை இயல்பிலா
தார்கட் பசைந்த துணையும்
பரிவாம்--அசைந்த நகையேயும் வேண்டாத நல்லறிவி
னார்கட் பகையேயும் பாடு பெறும்' (நாலடி.
187)
எனவும் வரும்
ஆன்றோர் பொன்மொழிகளையும் நினைக. மன்னவற் புகழ்ந்து - தருசகனைப் புகழ்ந்து.
மன்னர் : அச்சங்க மன்னர்.
|