உரை |
|
3. மகத காண்டம் |
|
4. புறத்தொடுங்கியது |
|
செத்தோர்ப்
புணர்க்கும் விச்சையொடு புணர்ந்தோர்க்
கேட்டு மறியலம் வீட்டருஞ்
சிறப்பிற்
புண்ணிய முடைமையி னண்ணின னாமிவன்
ஒருதலை யாகத் தருதல்
வாயென 95 உறுதி வேண்டி யுருமண்
ணுவாவும் மருவிய
தோழரு மன்னனைத் தேற்றி |
|
(இதுவுமது) 91 - 96 :
செத்தோர்.............தேற்றி |
|
(பொழிப்புரை) இறந்தோரை
மீட்டுத் தருகின்ற வித்தையை யுடையோரை யாம் கேட்டும் அறிந்திலேம்.
நீங்குதலில்லாத சிறப்பினையுடைய புண்ணிய மிகுதியாலே இம்முனிவன்
இவ்வித்தையை அடைந்தான் ஆதல் வேண்டும், இவன்
வாசவதத்தையைப் பழைய வடிவத்தோடு ஒரு தலையாக மீட்டுத் தருதல்
வாய்மையேயாகும் ; ஐயமின்று என்றுகூறி மேல்வரும் உறுதியை விரும்பி
உருமண்ணுவாவும் ஏனைத் தோழரும் உதயணனைத் தேற்றி யென்க. |
|
(விளக்கம்) வீட்டரும்
சிறப்பு - விடுதல் இல்லாத சிறப்பு. அருமை-ஈண்டின்மை மேற்று. இவன்
புண்ணியமுடைமையின் நண்ணினன் ஆம் என்க. நண்ணினன் - எய்தினன். உறுதி -
ஆக்கம். மன்னன் - உதயணன். |