உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
4. உருமண்ணுவா வந்தது |
|
இருந்த
பொழுதி லிப்பா லரசற்கு
நிகழ்ந்ததை யெல்லா நெறிமையிற்
கேட்டுப் 80 பொன்னிழை மாதரைப்
புணர்த்தல் வேண்டும்
இன்னே வருகென நின்னுழைப்
பெயர்த்தந்
தாங்கவ ரிருந்தன ராதலி
னீங்கினிச்
செய்வதை யெல்லா மெய்பெற
நாடெனத்
தூதுசெல் லொழுக்கிற் சாதக னுரைப்ப |
|
(இதுவுமது)
78 - 84 : இப்பால்.............உரைப்ப |
|
(பொழிப்புரை)
'பெருமானே ! இங்கு நம்மரசனுக்கு நிகழ்ந்த நிகழ்ச்சியையெல்லாம் முறையாகக்
கேட்டுணர்ந்து இனிப் பொன்னணிகலன் அணிந்த நங்கோப் பெருந்தேவியாரை நங்கோ மகனோடு
கூட்டுதல் வேண்டும். அதன் பொருட்டு நின்னை இப்பொழுதே அழைத்து வருக என்று நின்னிடத்தே
என்னை விட்டு அம்மலையரணிடத்தேயே அத்தேவி முதலியோர் இருக்கின்றனர்; ஆதலால்
இவ்விடத்தே நீ செய்தற்குரிய செயல்களையெல்லாம் உருப்பெற ஆராய்வாயாக' என்று தூது
சொல்லுகின்ற முறைமைப்படி அச்சாதகன் உருமண்ணுவாவுக்குக் கூறா நிற்ப;
என்க. |
|
(விளக்கம்) அரசற்கு : உதயணனுக்கு. நெறிமை - முறைமை. மாதரை -
வாசவதத்தையை. இன்னே - இப்பொழுதே. பெயர்த்தந்து - விட்டு. அவர் : வாசவதத்தை
முதலியோர். மெய்பெற - உருப்பெற. |