உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
4. உருமண்ணுவா வந்தது |
|
85 ஆற்றல் சான்ற தருசகற்
கண்டவன்
மாற்ற மெல்லா மாற்றுளிக்
கூறி
அவனுழைப் பாட்டகத் ததிபதி
யாகிய
தவறில் செய்தொழிற் சத்தி
யூதியை
வேண்டிக் கொண்டு மீண்டனன் போந்துழி
|
|
(உருமண்ணுவாவின்
செயல்) 85 - 89 :
ஆற்றல்...........போந்துழி
|
|
(பொழிப்புரை) அது கேட்ட உருமண்ணுவா ஆற்றல் மிக்க தருசக மன்னனைக் கண்டு அச்சாதகன் கூறிய மொழிகளை
யெல்லாம் முறைப்படி எடுத்துக்கூறி அம் மன்னனிடத்துப் ''பாட்டக நகரத்துத் தலைவனும்''
தவறில்லாத செய்தொழிலையுடையவனும் ஆகிய ''சத்தியூதி'' என்பவனைத் தன்னோடுய்க்கும்படி
வேண்டிப் பெற்றுக்கொண்டு அவ்விடத்தினின்றும் மீண்டும்போம் பொழுது;
என்க.
|
|
(விளக்கம்) அவன் மாற்றம் - சாதகன் கூறிய மொழிகளை.
அவனுழை - தருசகன்பால். பாட்டகம் - ஒரு நகரம். சத்தியூதி - அந்நகரத்துத் தலைவன்.
சத்தியூதியைத் தருசகன்பால் வேண்டி அழைத்துக் கொண்டு
என்க.
|