பக்கம் எண் :

பக்கம் எண்:606

உரை
 
4. வத்தவ காண்டம்
 
5. கனாவிறுத்தது
 
          
 30         கலக்க மறிந்த கனங்குழை மாதர்
            புலத்தல் யாவதும் பொருத்த மின்றென
            எனக்கு மொக்கு மெம்பெரு மான்றன்
            மனத்தகத் துள்ளோ ளின்னும் விள்ளாள்
            விழுத்தவ முடையள் விளங்கிழை பெரிதென
 
        (உதயணனுடைய குறிப்பறிந்து பதுமாபதி தன்னிடம் செல்லுதல் )
                 30 - 34 : கலக்கம்..........பெரிதென
 
(பொழிப்புரை) அவ்வுதயணனுடைய மனக் கலக்கத்தைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட கனவிய குழையினையுடைய அப்பதுமாபதி இச்செவ்வியில் எம்பெருமானொடு யான் ஊடுதல் ஒரு சிறிதும் பொருத்தமிலதாம் என்றும் இவ்வருத்தம் யானும் வருந்துதற்குரிய ஒன்றேயாகலின் எனக்கும் ஒக்கும். என்னே ! விளங்கிய அணிகலன்களையுடைய வாசவதத்தை நல்லாள் இன்னும் எம்பெருமானுடைய நெஞ்சினுள்ளே சிறிதும் அகலாளாய் வீற்றிரா நின்றாள் ! இங்ஙனம் இவன் நெஞ்சிலிடம் பெறுதற்கு அந்நங்கை பெரிதும் சிறந்த தவமுடையள் ஆதல் ஒருதலை என்றும்; என்க.
 
(விளக்கம்)   கலக்கம் - உதயணனுடைய மனக்கலக்கம். மாதர் : பதுமாபதி. யாவதும் - ஒரு சிறிதும். அவ்வருத்தம் எனக்கும் உரிய வருத்தமே என்றவாறு. இன்னும் என்றது, இத்தனை காலம் சென்றும் என்னை மணந்த பின்னரும் என இருபொருளும் தோற்றுவித்தது. விள்ளாள் - நீங்காள். விழுத்தவம் - சிறந்த தவம். விளங்கிழை : வாசவதத்தை.