உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
5. கனாவிறுத்தது |
|
85
அளப்பரும் படிவத் தறிவர்
தானத்துச் சிறப்பொடு சென்று
சேதியம் வணங்கிக் கடவது
திரியாக் கடவுளர்க் கண்டு
நின்றிடை யிருள்யாம நீங்கிய
வைகறை இன்றியான் கண்ட தின்னது
மற்றதை 90 என்கொ றானென நன்கவர்
கேட்ட உருத்தகு வேந்த னுரைத்ததன்
பின்றைத்
|
|
(முனிவரைக் கண்டு உதயணன்
வினாதல்)
85 - 91:
அளப்பரும்....................பின்றை
|
|
(பொழிப்புரை) அழகுமிக்க அவ்வேந்தர் பெருமான் அளத்தற்கரிய தவ ஒழுக்கத்தை மேற்கொண்டுள்ள
துறவோர் பள்ளியின்கண் அவர்க்குரிய கையுறையோடு சென்று ஆங்குள்ள அருகன் கோயிலை
வழிபட்டுத் தாம் செய்யக் கடவதாகிய அறத்திற் பிறழ்தலில்லாத முனிவர்களைக் கண்டு
வணங்கி நின்று "அடிகளே ! சென்ற இரவின்கண் இருள் மிக்க இடையாமம் கழிந்த வைகறை
யாமத்தே யான் கண்ட கனா இஃதாகும். அக்கனவின் பயன்றான் என்கொலோ?" என்று அம்
முனிவர் நன்கு கேட்கும்படி தான் கண்ட கனவினை அவர்க்குக் கூறிய பின்னர்;
என்க.
|
|
(விளக்கம்) படிவம்
- தவ ஒழுக்கம். அறிவர்தானம் - துறவோர் பள்ளி. சிறப்பு - கையுறைப் பொருள்.
சேதியம் - (ஈண்டு அருகன் கோயில்). கடவது - செய்யக் கடவதாகிய அறம். இன்று என்றது,
நெருநல் இரவினை. உரு - அழகு :
வடிவமுமாம்.
|