பக்கம் எண் :

பக்கம் எண்:621

உரை
 
4. வத்தவ காண்டம்
 
6. பதுமாபதியை வஞ்சித்தது
 
         பிரிந்துபின் வந்த பெருந்திற லமைச்சனொ
         டருந்திறல் வேந்த னமைவரக் கூடி
         இருந்த பின்றை நிகழ்ந்தது கூறெனச்
 
              (உதயணன் உருமண்ணுவாவை வினாதல்)
                  1 - 3 : பிரிந்து............கூறென
 
(பொழிப்புரை) அவ்வுதயண வேந்தன் தன்னைப் பிரிந்து பகைவர்பால் சிறையிருந்து பின் வந்துகூடிய பேராற்றல் வாய்ந்த அவ்வமைச்சனோடு நெஞ்சு பொருந்தக் கூடி அளவளாவி இருந்த பின்னர், "அன்பனே ! நீ என்னைப் பிரிந்த பின்னர் நினக்கு நிகழ்ந்ததனைக் கூறுக" என்று அவ்வமைச்சனை வினவா நிற்றலின்; என்க.
 
(விளக்கம்)  அமைச்சன் : உருமண்ணுவா. வேந்தன் : உதயணன். அமைவர - அமைதல் வர. அமைச்சனை வினாவ என்க.