பக்கம் எண் :

பக்கம் எண்:622

உரை
 
4. வத்தவ காண்டம்
 
6. பதுமாபதியை வஞ்சித்தது
 
          செருச்செய் மன்னன் சிறையிடைச் செய்தலும்
  5       தருசகன் றன்வயின் விடுத்த தன்மையும்
          பொருவகை புரிந்தவர் புணர்ந்த நீதியும்
          தெரிய வெல்லாம் விரியக் கூறி
 
        (உருமண்ணுவா நிகழ்ந்தவற்றை உதயணனுக்குக் கூறல்)
                 4 - 7 : செரு..............கூறி
 
(பொழிப்புரை) அதுகேட்ட உருமண்ணுவா தன்னோடு போர் செய்த எலிச்செவியரசன் சிறையிடைச் செய்த செயல்களையும், தருசகமன்னன் தன்னைச் சிறைவீடு செய்த தன்மையையும் போர் புரியும் வகையைச் செய்த அப் பகைமன்னர் நீதியோடு கூடி இருந்த செயலையும், பிறவற்றையும் விளங்கும்படி விரிவாகக் கூறி; என்க.
 
(விளக்கம்)  அமைச்சன் : எலிச்செவியரசன். தன்வயின் - தன்னை. பொருவகை - போர் புரியும் முறை. புணர்ந்த நீதி - மேற்கொண்ட நீதி. நீதி தன்னைக் கொல்லாதிருந்தமையும் தன்னைப் பேணியதும் சிறைவீடு செய்ததும் பிறவும் என்க.