உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
6. பதுமாபதியை வஞ்சித்தது |
|
அந்நிலை
கழிந்த பின்னிலைப்
பொழுதின் இன்புறு
செவ்வியு ளின்னது
கூறென 10 வன்புறை யாகிய
வயந்தகற் குணர்த்த
|
|
(உருமண்ணுவா வயந்தகனிடம்
கூறல்) 8
- 10 : அந்நிலை............உணர்த்த
|
|
(பொழிப்புரை) அங்ஙனம் உருமண்ணுவா உதயணன் வினாவிற்கு விடை கூறிய அந்நிலை கழிந்த பின்னர்
வற்புறுத்துபவனாகிய வயந்தகனைநோக்கி ''நம் மன்னன் இன்புற்றிருக்கும் செவ்வி பார்த்து
நீ இச் செய்தியைக் கூறுவாயாக!'' என்று தனி இடத்தே வயந்தகனுக்குக் கூறா நிற்ப;
என்க.
|
|
(விளக்கம்) உதயணன்
இன்புறு செவ்வியுள் என்க. வன்புறை -வற்புறுத்துபவன்; வற்புறுத்தும் இயல்பினையுடைய
வயந்தகனுக்கு என்க.
|