உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
6. பதுமாபதியை வஞ்சித்தது |
|
மானங் குன்றா வயந்தகன்
கூறும்
நயந்துநீ யரற்று நன்னுத
லரிவையும்
பயந்த கற்பிற் பதுமா
பதியுமென்
றிருவ ருள்ளுந் தெரியுங்
காலை 20 யாவர்
நல்லவ ரறிவினு
மொழுக்கினும்
யாவரை யுவத்தி யாவதை
யுணரக்
காவ லாள கரவா துரையென
|
|
(வயந்தகன்
உதயணனை
வினாதல்) 16
- 22 : மானம்............உரையென
|
|
(பொழிப்புரை) மானம் குறையாத வயந்தக குமரன் உதயணனை நோக்கி அவன் மன நிலையை மாற்றும்பொருட்டு,
"பெருமானே ! நீ இப்பொழுது பெரிதும் விரும்பிப் புலம்புவதற்குக் காரணமான அழகிய
நெற்றியையுடைய வாசவதத்தையும் பயன்மிக்க கற்பினையுடைய பதுமாபதியும் என்னும் இவ்விரு
நங்கையருள்ளும் ஆராயுங்கால் நினக்குச் சிறந்தவர் யார் ? நல்லறிவினாலும்
நல்லொழுக்கத்தினாலும் மிகச் சிறந்தவர் என்று நீ இவருள் யாரைப் பெரிதும்
விரும்புகின்றனை ? உலகங் காவலனே! யான் உணரும்படி மறைக்காமல் உரைத்தருளுக" என்று
வேண்டாநிற்ப; என்க.
|
|
(விளக்கம்) கூறும்
- கூறுவான். அரிவை : வாசவதத்தை. பயந்த - பயன்பட்ட. கற்புடைமை மகளிர்க்குப்
பெரும்பயன் நல்குமாகலின் பயந்த கற்பு என்றார். தெரியுங்காலை - ஆராயுங்கால். உவத்தி
- விரும்புவாய். ஆவதை - அதனை. காவலாள : விளி. கரவாது -
மறையாமல்.
|