(விளக்கம்) அவன்
: அவ்வயந்தகன். தேவி : வாசவதத்தை. செல்லல் - துன்பம். பீடு - பெருமை. ஒழுக்கின்
வாசவதத்தை, மகள் வாசவதத்தை, கண் வாசவதத்தை எனத் தனித்தனி கூட்டுக. பெண்ணருங்கலம்
- பெண்டிர்க்கெல்லாம் பேரணிகலம் போன்றவள்.
"மண்ணருங் கலமெலாம் வலிதின்
வவ்வினும் விண்ணருங் கலமெலாம் விதியி
னெய்தினும் பெண்ணருங் கலமிது பெறுதன்
மானிடர்க் கெண்ணருந் தகைத்தென விறைவ
னெண்ணினான்" (சூளா. இரதநூபுரச். 110)
எனவரும் தோலாமொழியையும் நினைக. செறுநர்
- பகைவர். உறு தவம் - மிக்க தவம். மறுகும் -
சுழலாநிற்கும்.
|