(விளக்கம்) இப்பகுதியின்கண்
அமைச்சனும் நண்பனுமாகிய வயந்தக குமரன் மன்னனை மேற்சென்றிடிக்கும் செயலை நினைந்து
மகிழ்க.
"நகுதற் பொருட்டன்று நட்டன்
மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற்
பொருட்டு" (குறள். 784)
என வரும் குறளையும், "தம்முயிர்க்
குறுதியெண்ணார் தலைமகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின்
றுரைக்கும் வீரர்" (கம்ப. மந்திர. 9) எனவரும் கம்பநாடர் மொழியையும் நினைக.
அன்னதும் ஆக - வாசவதத்தையை மறந்து பதுமாபதியைக் காமுற்றது முறையே என்று நீ
கொள்ளுமிடத்து அது முறையேயாயினும் ஆகுக என்றவாறு. அதனையும் - அக்காதலையும். திறப்பட -
உறுதியாக. இது - இவ்வாசவதத்தைக்
காதலை.
|