பக்கம் எண் :

பக்கம் எண்:637

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
         மறப்பிடைக் காட்டுதல் வலித்தன ராகிச்
     15   சிறப்புடை மாதரைச் சிவிகையிற் றரீஇப்
         பெறற்கருங் கொழுநன் பெற்றி காண்கென
         ஆய்மணி விளக்கத் தறையகம் புகுத்தலின்
 
                   (இதுவுமது)
           14 - 17: மறப்பு.........புகுத்தலின்
 
(பொழிப்புரை) அவ்வுதயண மன்னன் மெய்ம்மறந்திருக்கும் செவ்வியில் அப்பண்புகளை அவளுக்குக் காட்டுதலைத் துணிந்தவராய்ப் பெருஞ்சிறப்புடைய அவ்வாசவதத்தையைச் சிவிகையில் ஏற்றிக் கொணர்ந்து, ''தேவீ! பெறுதற்கரிய நின் கணவனுடைய தன்மையைக் கண்டருளுக'' என்று கூறி அழகிய மணிவிளக்கங்களையுடைய அப்பள்ளிப் பேரறையினூடே விடுத்தலாலே; என்க.
 
(விளக்கம்) மறப்பிடை - மெய்ம்மறந்திருக்கும் செவ்வியில். சிறப்புடை மாதர் : பட்டத்துத் தேவியாகிய வாசவதத்தை. கொழுநன் - கணவன். ஆய் - அழகு. அறை - பள்ளிப்பேரறை.