உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
7. வாசவதத்தை வந்தது |
|
வாசவ
தத்தாய் வந்தனை யோவெனக்
கூந்தன் முதலாப் பூம்புற
நீவி
ஆய்ந்த திண்டோ ளாகத்
தசைஇ
என்வயி னினையா தேதிலை போல
50 நன்னுதன் மடவோய் நாள்பல
கழிய
ஆற்றிய வாறெனக் கறியக் கூறென
|
|
(உதயணனுடைய
செயல்) 46
- 51 : வாசவ.........கூறென
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணன் துயில் மயக்கத்தோடே, ''வாசவதத்தாய்! நீ வந்து விட்டாயோ''
என்று கூறிக்கொண்டு அவளுடைய கூந்தலையும் அழகிய முதுகையும் கையாற்றடவி மெலிந்த தனது
திண்ணிய தோளை அவள் மார்பிற் சாத்தி, ''நல்ல நெற்றியையுடைய நங்காய் ! நீ
என்னைப் பிரிந்து நாள்கள் பல கழியாநிற்பவும் என்னை நினையாமல் அயலாள் போன்று
பிரிவுத் துன்பத்தை எவ்வாறு ஆற்றி யிருந்தனை ? அதனை யான் அறியும்படி கூறுவாயாக என்று
வினவாநிற்ப; என்க.
|
|
(விளக்கம்) பூம்புறம் - அழகிய முதுகு. ஆய்ந்த - மெலிந்த.
ஆகம் - மார்பு. அசைஇ - சாத்தி. என்வயின் - என்னை. ஏதிலை போல - அயலாள்
போல.
|