உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
7. வாசவதத்தை வந்தது |
|
மாற்றுரை கொடாஅண்
மனத்தோ டலமரீஇக்
கோட்டுவன ளிறைஞ்சிக் கொடுங்குழை
யிருப்ப
|
|
(வாசவதத்தை
வாளாவிருத்தல்)
52 - 53 : மாற்றுரை.............இருப்ப
|
|
(பொழிப்புரை) அம்மொழி கேட்ட வளைந்த குழையினையுடைய அவ்வாசவதத்தை தன் நெஞ்சினுள் சுழற்சி எய்தி
மறுமொழி கொடாளாய்த் தலைகுனிந்து வாளாவிருப்ப ; என்க.
|
|
(விளக்கம்) மாற்றுரை - மறுமொழி. அலமரீஇ - சுழன்று.
கோட்டுவனள் - குனிந்து. கொடுங்குழை : அன்மொழித்தொகை;
வாசவதத்தை.
|