உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
7. வாசவதத்தை வந்தது |
|
தரற்று
மன்னனை யருமறை நாவின்
வயத்தகு வயந்தகன் வல்விரைந் தெய்தி
95 இருளும் பகலு மெவ்வமொ
டிரங்குதல்
பொருளஃ தன்றே புரவலர்
மாட்டெனக்
காரணக் கிளவி கழறுவனன் காட்டத்
|
|
(வயந்தகன்
உதயணனிடம்
கூறல்) 93
- 97 : அருமறை...........காட்ட
|
|
(பொழிப்புரை) அங்ஙனம் புலம்பாநின்ற அம் மன்னன்பால் உணர்தற்கரிய மறைகளைப் பயின்ற
செந்நாவினையுடைய வலிமையுடைய வயந்தகன் மிக விரைந்துவந்து 'அரசே ! உலகாள் வேந்தர்
இரவும் பகலும் துன்பத்தோடே புலம்பிக்கொண்டிருத்தல் நற்செயலாகாது'' என்று காரணங்களைக்
காட்டும் சொற்கள் பலவும் எடுத்துக்காட்டி இடித்துரையா நிற்ப என்க.
|
|
(விளக்கம்) வய - வலி. வல்விரைந்து - மிக விரைந்து. இருள்
- இரவு; ஆகுபெயர். எவ்வம் - துன்பம். பொருள் - நற்செயல். புரவலர் - அரசர்.
காரணக்கிளவி - காரணத்தைக் காட்டு மொழி. கழறுவனன் -
இடித்துரைப்ப.
|