| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 7. வாசவதத்தை வந்தது |
| |
வாச
வெண்ணெ யின்றி மாசொடு
பிணங்குபு கிடந்த பின்னுச்சேர் புறத்தொடு
105 மணங்கமழ் நுதலு மருங்குலு
நீவி
அழிவுநனி தீர்ந்த யாக்கையே
னாகிக்
கழிபே ருவகையொடு கண்படை
கொளலும்
மறுத்தே நீங்கினள் வயந்தக
வாராய்
நிறுத்த லாற்றே னெஞ்ச மினியெனக்
|
| |
(இதுவுமது)
103 - 109 : வாச..........என
|
| |
| (பொழிப்புரை) ''யான் அவளுடைய நறுமண வெண்ணெயிடாமல் அழுக்கோடு பின்னிக்கிடந்த சடையினையுடைய
முதுகினோடு நறுமணங் கமழும் நுதலையும் இடையையும் என் கைகளாலே தடவி நன்கு மெலிவகன்ற
உடம்பினையுடையேனாகிப் பெரிதும் மகிழ்ச்சியோடு மீண்டும் துயில்கொண்டேனாக ! அவள்
மீண்டும் அந்தோ ! என்னைப் பிரிந்து போயினள் காண் ! யான் என் னெஞ்சத்தை
இப்பொழுது அமைதியின்கண் நிறுத்தவியலாதேன் ஆயினேன்'' என்று வருந்திக் கூறாநிற்ப
என்க.
|
| |
| (விளக்கம்) பிணங்குபு - பின்னலுற்று. பின்னு - சடை. புறம் -
முதுகு. மருங்குல் - இடை. அழிவு - மெலிவு. ஆக்கை - உடம்பு. கழிபேருவகை - மிகவும் பெரிய
மகிழ்ச்சி. கண்படை - துயில். முன்னர் வயந்தகன் கூறியபடி மனத்தை ஒருநிலையில்
நிறுத்தித் துயின்றானாகலின். இனி அவ்வாறு நிறுத்திவைத்தல் இயலாது என்பான்
இனி நெஞ்சம் நிறுத்தல் ஆற்றேன்
என்றான்.
|