(விளக்கம்) "பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற்
கற்றாதந் தின்மகிழா னந்தணரை யின்புறுப்பச் --
சென்னிதன் மானிலமே யானுலகம் போன்றது
வான்றுகள்போர்த் தானுலக மண்ணுலகா
மன்று.'
எனவரும்
(தொல் - புறத் - சூ. 35, நச். மேற்.) பழம்பாடலான் அந்தணர்க்கு ஆன் வழங்கும்
வழக்கத்தை யுணர்க.
சேடு - பெருமை.
சேதா - சிவப்புப் பசு. கோடி - புத்தாடை. முற்றி - சுற்றி. தேவி : வாசவதத்தை.
வீசி - வழங்கி.
|