பக்கம் எண் :

பக்கம் எண்:655

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           நனவிற் கண்ட நன்னுதன் மாதரைக்
           கனவெனக் கொண்டலி னினியோர்க்கு முரையான்
           காமுறு நெஞ்சிற் காதலர்ப் பிரிந்தோர்க்
     135    கேமுறு வேட்கை யாகு மென்ப
           தீதுகொ லென்னப் பற்பல நினைஇ
           இருந்த செவ்வியுள் வயந்தகன் குறுகி
 
                    (இதுவுமது)
           132 - 137 : நனவில்.........செவ்வியுள்
 
(பொழிப்புரை) நனவிலே தான் கண்ட நல்ல நெற்றியையுடைய வாசவதத்தையை அவ்வுதயணன் கனவென்றே கொள்ளுதலாலே தன் நண்பர்களுக்கும் கூறானாய்க் காமமுற்ற நெஞ்சினையுடைய காதலரைப் பிரிந்துறைவோருக்கு இன்பமுறுதற்குக் காரணமான அவாவினாலே நிகழுங் காரியம் இத்தகையதுபோலும் என்று தன்னெஞ்சினுள்ளே இன்னோரன்ன பற்பலவற்றை நினைத்து இருந்த பொழுதின் என்க.
 
(விளக்கம்) மாதர் : வாசவதத்தை. இனியோர் - நண்பர். ஏம் - ஏமம் ; இன்பம். வேட்கையானிகழும் செயல் ஈது கொல் என்க. நினைஇ - நினைத்து.