(விளக்கம்) தோழன் : வயந்தகன். காப்பு - பொறியடக்கம்.
கண்டோன் - காணப்பட்டவன். ஒளிமட்டும் இருவருக்கும் ஒத்துளது என்றவாறு.
உழுவலன்புண்மையாலே மனம் தழுவ விரும்பிற்று என்பது கருத்து. ஆராய்கின்றோன் : பெயர்.
அகலம் - மார்பு. நூல் - பூணூல். மருப்பு நுதி சிலேகை - கொம்பின் நுனியழுத்திய
கோடாகிய தழும்பு. யூகிக்கு மார்பின்கண் இங்ஙனமொரு
தழும்புண்டென்பதனை
'வலிந்துமேற் சென்ற கலிங்கத் தரசன் குஞ்சர
மருப்பிற் குறியிடப் பட்டுச் செஞ்சாந்து மெழுகிய சேடுபடு
செல்வத்து மார்பினது வனப்பும்' (1. 45 : 20 -
3)
என முன்னும்
வந்தமையாலுணர்க.
|