உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
7. வாசவதத்தை வந்தது |
|
185 ஐயந் தீர்ந்து
வெய்துயிர்த் தெழுந்துநின்
றூறில் சூழ்ச்சி யூகந்த
ராய
நாறிருங் கூந்தலை மாறிப்
பிறந்துழிக்
காணத் தருகுறு முனிவனை
நீயினி
யாணர்ச் செய்கை யுடைத்தது தெளிந்தேன்
190 வந்தனை யென்றுதன் சந்தன
மார்பிற் பூந்தார்
குழையப் புல்லினன் பொருக்கெனத் |
|
(இதுவுமது)
185 - 191 : ஐயம்...........புல்லினன் |
|
(பொழிப்புரை) அது கண்ட அரசன் ஐயந் தீரப்பெற்றவனாய் வெய்தாக மூச்செறிந்து எழுந்து நின்று இடையூறு
சிறிதுமில்லாத நல்ல சூழ்ச்சியினையுடைய யூகந்தராயனே! -- நறுமணங்கமழும் கூந்தலையுடைய
வாசவதத்தை மாறிப் பிறந்தவிடத்தினின்றும் மீட்டுக் கொணர்ந்து யான் காணும்படி
தாராநின்ற முனிவர் பெருமானே,--இப்பொழுது நீயே ஈண்டு வந்தனைகாண் ! அங்ஙனம்
வந்தமையாலே ஒரு புதிய செயலும் நிகழவிருக்கின்றது என்றும் யான் தெளிந்து கொண்டேன்
காண் ! என்று கூறி அந்த யூகியை இரு கைகளாலும் அணைத்துச் சந்தனந் திமிர்ந்த தன்
மார்பிலணிந்த மலர்மாலை குழையும்படி தழுவிக் கொள்வானாயினன்
என்க. |
|
(விளக்கம்) ஐயம் - இவன் யூகியோ? அல்லனோ ? என்னும்
ஐயம். ஊறு - இடையூறு. பிறர் உற்றறிதலுமாம். யூகந்தராயன் - யூகியின் முழுப்பெயர்.
நாறிருங் கூந்தல்; வாசவதத்தை. தருகுறும் - தரும். இனி - இப்பொழுது. நீ வந்தமையால்
புதிய நிகழ்ச்சி ஒன்று நிகழவிருக்கின்றது என்றது, யான், வாசவதத்தையை மீண்டும்
எய்துவேன் என்னும் குறிப்புடையது. யாணர்ச் செய்கை - புதுச் செயல், புல்லினன் -
தழுவினன். |