பக்கம் எண் :

பக்கம் எண்:664

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
            பூங்குழை மாதரைப் பொருக்கெனத் தம்மென்
            றாங்கவன் மொழிந்த வல்ல னோக்கி
     200    நன்னுதன் மாதரைத் தாயொடு வைத்த
            பொன்னணி கோயில் கொண்டனர் புகவே
 
                 (வாசவதத்தை வருகை)
              198 - 201 : பூங்குழை...........புகவே
 
(பொழிப்புரை) பின்னரும் அம் மன்னவன் 'நண்பனே ! பூங்குழையணிந்த என் காதலி வாசவதத்தையை விரைந்து அழைத்திடுக!' என்று கூறிப் படாநின்ற அல்லலைக் கண்டு அம்மன்னனை அத்தோழர்கள் வாசவதத்தையைச் சாங்கியத்தாயோடு வைத்திருந்த பொன்னால் அழகு செய்யப்பட்ட அவ்விருந்து மாளிகைக்கு அழைத்துப் போய்ப் புகாநிற்பவென்க.
 
(விளக்கம்) பொருக்கென : விரைவுக் குறிப்பு. தம் - தாரும். அவன் உதயணன். நன்னுதன் மாதர் : வாசவதத்தை. தாய் - செவிலி, சாங்கியத்தாய்.