பக்கம் எண் :

பக்கம் எண்:666

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           தோண்மீ தூர்ந்த துயர நீங்கக்
           காந்த ணறுமுகை கவற்று மெல்விரல்
     210    பூண்கல மின்மையிற் புல்லெனக் கூப்பிப்
 
                     (இதுவுமது)
             208 - 210 : தோள்...........கூப்பி
 
(பொழிப்புரை) தன் கைகடந்து பெருகிய துன்பமெல்லாம் அகலும்படி காந்தளினது நறிய அரும்பினைப் பழிக்கும் அழகிய மெல்லிய விரல்களையுடைய தன் கைகளை அணிகலன் ஏதுமின்மையால் பொலிவிழப்பக் குவித்துத் தொழுது என்க.
 
(விளக்கம்) தோண் மீதூர்ந்த - கைகடந்து பெருகிய. புல்லென - பொலிவின்றித் தோன்றாநிற்ப.