உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
8. தேவியைத் தெருட்டியது |
|
உருவி னல்லது
பெண்மையி னின்னொடு 110 திருநுதன்
மடவோய் தினையனைத்
தாயினும் வெள்வேற் கண்ணி
யொவ்வா
ளென்றவள் உவக்கும்
வாயி னயத்தகக் கூறித்
|
|
(உதயணன்
வாசவதத்தையைத் தெருட்டி
மகிழ்தல்)
109 - 112 : உருவின்...........கூறி
|
|
(பொழிப்புரை) மீண்டும் அவளை இனிதின் நோக்கி, "திரு நுதல் மடவோய் ! அப்பதுமாபதி வெளித்
தோற்றத்தினாலல்லது பெண்மை நலத்தில் நின்னை ஒரு தினைத்துணையும் ஒவ்வாள் காண்"
என்று அவ்வாசவதத்தை நெஞ்சம் மகிழும் வழியை ஆராய்ந்து அவள் பெரிதும் விரும்பும்படி
கூறி ; என்க.
|
|
(விளக்கம்) உருவம் என்றது புறத் தோற்றத்தை. பெண்மை -
பெண்மைத் தன்மை. தினை - ஓர் அளவு. வெள்வேற் கண்ணி - வெள்ளிய வேல்போன்ற
கண்ணையுடைய பதுமாபதி. அவள் : வாசவதத்தை. வாயில் - வழி. நயத்தக -
விரும்பும்படி.
|