பக்கம் எண் :

பக்கம் எண்:693

உரை
 
4. வத்தவ காண்டம்
 
9. விருத்தி வகுத்தது
 
         
    25    விடுத்தவற் போக்கிய பின்றை யடுத்த
          ஆதி யாகிய சேதிநன் னாடு
          யூகிக் காகென வோலை போக்கி
 
               (யூகியின் பேறு)
           25 - 27 : அடுத்த..........போக்கி
 
(பொழிப்புரை) தன் நாட்டினை அடுத்ததும் தனக்கு முதலில் ஆட்சி செய்ய அமைந்ததும் ஆகிய சேதி என்னும் நல்ல நாடு யூகிக்குச் சீவிதம் ஆகுக என்று அந்நாட்டிற்கு ஓலைவிடுத்த பின்னர்; என்க.
 
(விளக்கம்) வத்தவநாட்டினை அடுத்ததும் தன் ஆட்சிக்கு முதலாயதும் ஆகிய சேதிநாடு என்க. யூகிக்குச் சீவிதம் ஆகுக என்று என்க.