பக்கம் எண் :

பக்கம் எண்:695

உரை
 
4. வத்தவ காண்டம்
 
9. விருத்தி வகுத்தது
 
          வயந்தகன் றனக்கு வழக்குப்புற மாகெனப்
    35    பயம்படு நன்னகர் பதினொன் றீத்து
          வைக லாயிரங் கைவயிற் கொடுத்துப்
          பிரியா துறைகென வருடலை நிறீஇ
 
            (வயந்தகனுக்கு அளித்தவை)
            34 - 37 : வயந்தகன்.........நிறீஇ
 
(பொழிப்புரை) பின்னர் வயந்தக குமரனுக்குச் சீவிதப் பொருளாகுக என்று பயன்மிக்க பதினொரு நகரங்களை வழங்கி நாளொன்றிற்கு ஆயிரம் பொன் ஊதியமாகக் கையிற்கொடுத்து, நீ என்னைப் பிரியாமல் ஈண்டே இருப்பாயாக என்று அருளித் தன்பால் நிறுத்திக்கொண்டு;   என்க.
 
(விளக்கம்) வழக்குப் புறம் - சீவிதத்தின் பொருட்டு இறையிலியாக விடப்படும் நிலம். வைகல் ஆயிரங் கொடுத்து - ஒவ்வொரு நாளும் ஆயிரம் ஆயிரம் பொன் ஊதியமாக அளித்து.