உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
9. விருத்தி வகுத்தது |
|
வாசவ
தத்தைக்கும் பதுமா பதிக்கும்
தேவி விருத்தி யாவன
வருளி ஆடலும் பாடலு
மணியினு
மிக்கோர் சேடி
மாரையு மிருகூ றாக்கிக் 70 கொள்கென
வருளிக் குறைபா டின்றி |
|
(உதயணன் தன்
தேவிமார்க்கு
விருத்தியளித்தல்)
66 - 70 : வாசவதத்தை............அருளி |
|
(பொழிப்புரை) இன்னும், வாசவதத்தையும் பதுமாபதியும் ஆகிய
கோப்பெருந்தேவிமார் இருவர்க்கும் தேவி விருத்தி என்னும் சிறப்புச் சீவிதப்
பொருள்களை அவர் பெருமைக்கு ஏற்பனவாக வழங்கி ஆடுதலினும் பாடுதலினும் அழகினும்
சிறந்தோர்களாகிய தோழிமார்களையும் இருகூறாக வகுத்து இருவர்க்கும் வழங்கி;
என்க. |
|
(விளக்கம்) தேவி விருத்தி - தேவிமார்க்கு வழங்கும் சீவிதம். ஆடலும் பாடலும் அணியினு மிக்கோர்
சேடி மாரையும் என்னும் இத்தொடர், 'ஆடலும் பாடலும் அழகுங்காட்டி' எனவரும்
மணிமேகலையினையும் (18 - 104) 'ஆடலும் பாடலும் அழகுமென்றிக் கூறிய மூன்றின் ஒன்று
குறைபடாமல்' எனவரும் சிலப்பதிகாரத்தையும் (3 : 8 - 9)
நினைவூட்டுகின்றது. |