(விளக்கம்) காட்சி - ஊழினால் தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் ஓரிடத்தே தலைப்பட்டு
ஒருவரையொருவர் காண்டல். இன்ப வாழ்க்கைக்கு இக்காட்சியே முதலாகலின் அதனை அடிமரமாக
உருவகித்தார். இதனை,
'ஒன்றே வேறே யென்றிரு
பால்வயி னொன்றி யுயர்ந்த பால
தாணையி னொத்த கிழவனுங் கிழத்தியுங்
காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே' (தொல். கள.
சூ,. 2).
எனவரும் தொல்காப்பியத்தானும் உணர்க.
காட்சி - பெருமுதலாக என்றமையால் ஏனைய அகத்துறைகள் ஆகிய மாண் சினைபல்கிய மரம்
என்க. வேட்கை என்னும் மரம். புணர்ச்சி இன்பத்திற்குக் காரணமாகலின் அதனைப் பூ
என்றார். இன்பம் - காய் என்க. இம்மரத்தின் பயன் அன்பு ஆகலின் அற்புக் கனி ஏந்த
என்றார். இப்பகுதியோடு,
'ஏகம் முதற்கல்வி
முளைத்தெழுந் தெண்ணில் கேள்வி ஆகம் முதற்றிண் பணைபோக்கி
யருந்த வத்தின் சாகந் தழைத்தன் பரும்பித்த ருமம்ம
லர்ந்து போகங் கனியொன்று பழுத்தது போலு
மன்றே' (கம்ப. நகர. 75)
என்ற கம்பநாடர் வாக்கினையும்
காண்க.
9. விருத்தி வகுத்தது
முற்றிற்று.
|