பக்கம் எண் :

பக்கம் எண்:707

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
         
    35    கட்டுரை மகளொடு கரும நுனித்து
          விட்டுரை விளங்கிய விழுப்புக ழாளரும்
          கற்ற நுண்டொழிற் கணக்கருந் திணைகளும்
          காய்ந்த நோக்கிற் காவ லாளரும்
          தேன்றார் மார்பன் றிருநகர் முற்றத்துக்
 
                   (இதுவுமது)
           35 - 39 : கருமம்...............முற்றத்து
 
(பொழிப்புரை) காரியங்களைக் கூர்ந்தறிந்து பின்னர் வெளிப்படுத்திக் கூறுவதன்கண் விளங்கிய சிறந்த புகழையுடையோரும் நுணுகிய கணிதத் தொழில் கற்ற கணக்கர்களும் அதிகாரிகளும் சினந்த நோக்கினையுடைய காவலர்களும் தேன் துளும்பும் மாலையணிந்த உதயணனுடைய அழகிய அரண்மனை முற்றத்தின்கண்; என்க.
 
(விளக்கம்) னித்து - கூர்ந்துணர்ந்து. விட்டுரை - பிறர் வெளிப்படுத்திக் கூறும் புகழுமாம். நுண்தொழில் கற்ற கணக்கர் என்க. திணைகள் - அதிகாரிகள். காய்ந்த - சினந்த. மார்பன் : உதயணன். நகர் - அரண்மனை.