பக்கம் எண் :

பக்கம் எண்:71

உரை
 
3. மகத காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
         
     
           
            வாயில் போந்து வைய மேறிற்
     95     சாய னோமெனத் தாயகட் டெடுத்துப்
           போற்றுப்பல கூற வேற்றுவன ளிருப்பப்
 
        (பதுமாபதியைச் செவிலித்தாய் வண்டியேற்றுதல்)
             94 - 96 : வாயில்............இருப்ப
 
(பொழிப்புரை) அங்ஙனம்  இறங்கியவள்  முற்றத்தே 
  நடந்து வந்து வண்டியிலேறின் அவளுடைய மென்மைத் தன்மையாலே
  பெரிதும்  வருந்தாநிற்பள்  என்றுட்கொண்டு  செவிலித்தாய் அவளைத்
  தன் வயிற்றிலே அணைத்தெடுத்துக் கொடுபோய்த் தோழியர்
  வாழ்த்துக்கள் பலவுங் கூறாநிற்ப வண்டியிலே ஏற்றுதலாலே பதுமாபதி
  வண்டியிலே அமர்ந்திராநிற்ப என்க.
 
(விளக்கம்) வையம் - வண்டி. சாயல் - மென்மை.
  மென்மை யுடைமையாலே நோமென்க. தாய் - செவிலி.
  தோழியர் போற்றுக் கூற என்க- அகட்டெடுத்து - வயிற்றிலணைத்
  தெடுத்து.