உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
10. பிரச்சோதனன் தூதுவிட்டது |
|
85 பழியி
லொழுக்கிற் பதுமை யென்னும்
கழிமதி மகளொடு கற்றோர்
தெரிந்த கோல்வ
லாளர் கொண்டனர் புக்குத்தம்
கால்வல் லிவுளிக் காவலற் காட்டத்
|
|
(இதுவுமது)
85 - 88
: பழி...........காட்ட
|
|
(பொழிப்புரை) உதயணனுடைய கற்றோரால்
ஆராய்ந்தெடுக்கப்பட்ட பிரப்பங்கோல் ஏந்தும் காவலாளர் வசையில்லாத ஒழுக்கத்தையுடைய
பதுமை என்னும் பேரறிவுடைய தூதியை அழைத்துக் கொடு போய் மாளிகையுட் புகுந்து
காற்றுப்போல விரைந்து செல்லும் குதிரையையுடைய தம்மரசனை அவட்குக் காட்டா நிற்க;
என்க.
|
|
(விளக்கம்) பழி
- வசை. கழிமதி - பேரறிவு. மகளொடு - மகளை; உருபு மயக்கம். கற்றோர் தெரிந்த -
கற்றோரால் ஆராய்ந்தெடுக்கப்பட்ட. இவுளி - குதிரை. காவலன் :
உதயணன்.
|