| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 10. பிரச்சோதனன் தூதுவிட்டது |
| |
மூப்பினு முறையினும் யாப்பமை
குலத்தினும்
அன்பினுங் கேளினு மென்றிவை
பிறவினும்
......................................................... மாசனம்
புகழு மணிபுனைந் தியற்றிய 100 ஆசனத்
திழிந்த வமைதிகொ ளிருக்கையன்
|
| |
(உதயணன் ஓலை
பெறுதல்) 97
- 100 : மூப்பினும்.........இருக்கையன்
|
| |
| (பொழிப்புரை) மூப்பாலும் முறைமையாலும் தொடர்பமைந்த
குலத்தாலும் அன்பாலும் கேண்மையாலும் இவை போன்ற பிற பண்புகளாலும்......பெருமக்கள்
புகழுதற்குக் காரணமான மணிகள் பதித்து இயற்றப்பட்ட ஆசனத்தினின்றும் இறங்கி அமைதி
கொள்ளுதற்குக் காரணமான மற்றோர் இருக்கையின்கண் இருந்து; என்க.
|
| |
| (விளக்கம்) மூப்பு முதலியன அவ்வவையோர்க்கு அடைமொழிகளாதல் வேண்டும். இவை பிரச்சோதனனுக்குரிய
அடைமொழிகள் என்பாருமுளர். 99ஆம் அடி அழிந்தொழிந்தது. மாசனம் -
பெருமக்கள்.
|