| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 10. பிரச்சோதனன் தூதுவிட்டது |
| |
யான்செயப் படுவது தான்செய் தனனினிப்
130 பாம்பு மரசும் பகையுஞ்
சிறிதென ஆம்பொரு
ளோதின ரிகழா
ரதனாற் றேம்படு
தாரோன் றெளிதலொன்
றிலனாய் ஓங்குகுடை
நீழ லுலகுதுயின் மடியக்
குழுவிகொள் பவரி னிகழா தோம்பிப்
135 புகழ்பட வாழ்க புகழ்பிறி
தில்லை
|
| |
(இதுவுமது)
129 - 135 :
இனி..................இல்லை
|
| |
| (பொழிப்புரை) "இனித் தமக்கு ஆக்கமாகும் பொருள் நூலை
நன்கு ஓதியுணர்ந்தவர்கள் பாம்பும் அரசும் பகையும் சிறிதென்று கருதி இகழ்வாரல்லர்.
அதனால் தேன் துளிக்கும் மலர் மாலையை யணிந்த அரசனாகிய நீ பகைவர் சிறியர் என்று
இகழாதே கொள்; அவரை ஆராய்ந்து தெளியாமலும் இராதே; விழிப்புடன் இருந்து நினது ஓங்கிய
கொற்றவெண்குடை நீழலின்கண் இவ்வுலகில் வாழும் உயிரெல்லாம் இனிதே இன்புற்றிருக்கும்படி
தம் மகவினைப் பாதுகாக்கும் நற்றாயர்போலச் சோர்வின்றி நின் குடிமக்களைப்
பாதுகாத்துப் புகழுண்டாக வாழ்வாயாக ! இதனினுங் காட்டில் நினக்குச் சிறந்த புகழ்
பிறிதில்லை;' என்க.
|
| |
| (விளக்கம்) "பாம்பும் அரசும் பகையுஞ் சிறிதென ஆம் பொருளோதின ரிகழார்' என்னும் இதனொடு,
'அளையுறைபாம்பு மரசு நெருப்பின முழையுறை சீயமு மென்றிவை நான்கு, மிளைய வெளிய
பயின்றபு, வென் றெண்ணி, இகழி னிழுக்கந் தரும்' எனவரும் ஆசாரக்கோவையையும் (84)
ஒப்புக்காண்க. உலகு - உலகில் வாழும் உயிர்கள்; ஆகுபெயர். 'குழவிகொள்பவரின்
இகழாதோம்பி' என்னும் இதனோடு, 'காவல், குழவி கொள்பவரி னோம்பு மதி' (புறநா.
5); எனவும், 'குழவி கொள் வாரிற் குடிபுறந்தந்து' (பதிற். 6ஆம் பதிகம்) எனவும் பிற
சான்றோர் கூறுதலும் நினைக.
|