உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
10. பிரச்சோதனன் தூதுவிட்டது |
|
ஆனாக் காத லவந்திகை
தன்னகர் மேனாட்
காலை வெவ்வழற் பட்ட 145 தீயுண்
மாற்றம் வாயல வெனினும்
உரையெழுதி வந்தவிவ் வோலையு
ளுறாக்குறை பழுதா
லென்று பதுமையை நோக்கப் |
|
(உதயணன்
பதுமையை
வினாதல்) 143
- 147 : ஆனா............நோக்க |
|
(பொழிப்புரை) 'குறையாத காதலையுடைய வாசவதத்தையினுடைய
மாளிகையின்கண் பண்டு வெவ்விய தீப்பற்றிய காலத்தே அவள் தீயுள் இறந்த செய்தி
உண்மையன்றெனினும், நும் மன்னனால் செய்தி எழுதப்பட்டுவந்த இந்த மந்திரவோலையின்கண்
அச்செய்தி எழுதாது விடப்பட்ட செயல் குற்றமாகாதோ' என்று கூறி அத்தூதியை
நோக்காநிற்ப; என்க. |
|
(விளக்கம்) ஆனா
- அமையாத. அவந்திகை : வாசவதத்தை. மேனாள் வெவ்வழற்பட்ட காலை என மாறுக. மாற்றம்
- செய்தி. வாயல - உண்மையல்ல. உறாக்குறை - எழுதாது விடப்பட்ட காரியம். பதுமையை
அதற்கு விடை வேண்டி நோக்கா நிற்ப என்க. |