பக்கம் எண் :

பக்கம் எண்:725

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          பல்வகை மரபிற் பண்ணி காரம்
          செல்வன வெல்லாஞ் செவ்விதிற் கண்டு
 
        (உதயணன் பண்ணிகாரங்களைக் காணுதல்)
              177 - 178 : பல்..........கண்டு
 
(பொழிப்புரை) உதயண மன்னன் தன் மாமடிகளாகிய பிரச்சோதன மன்னன் வரிசையாகத் தமக்கு விடுத்த பலவேறு வகைப்பட்ட பொருள்கள் அரண்மனைக்குள் கொண்டு செல்வனவற்றை எல்லாம் நன்கு கண்கூடாகப் பார்வையிட்டு; என்க.
 
(விளக்கம்) பண்ணிகாரம் - பலவகைப் பொருள். செவ்விதின் - நன்கு.