(பொழிப்புரை) பின்னர் நூல்நெறியினை இகழ்ந்து பிழைத்தல்
இல்லாத யூகி கேள்! அவந்தி நாட்டரசன் நின்னை ''வருக!'' என்று அருளிச் செய்தமையாலே நீ
அம் மன்னன் தூதரொடு வாசவதத்தையின் பிறந்தையாகிய உஞ்சை நகரத்திற்குச் சென்று இங்கு
நிகழ்ந்ததனையும் சொல்லி நின்னுடைய நீதிகளையும் விளக்கி அந்நகரத்தின்கண் நெடிது
தாமதியாமல் மீண்டு வருக என்று கூறி மறுநாள் அத் தூதுவரொடு அவனையும் உஞ்சை
நகரத்திற்குப் போக்கினன்; என்க.