உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது |
|
கோல மான கோபத்திற்
பிறந்தன
பாலவா வேறொடு பதினா
றாயிரம்
காவல் வேந்தற்குக் காட்டுபு கொடுக்கெனப் |
|
(இதுவுமது)
32 - 34 :
கோலம்..........கொடுக்கென |
|
(பொழிப்புரை) ழகான கோபங்களில் தோன்றிய மிக்க பாலையுடைய பதினாறாயிரம் ஆக்களும் காளைகளும்
வழங்கி "இவையிற்றை அந்நாட்டினைப் பாதுகாக்கும் பிரச்சோதன மன்னனுக்குக் கண்கூடாகக்
காட்டி அளித்திடுக !" என்று கூறி; என்க. |
|
(விளக்கம்) கோலம் - அழகு. கோபம் - ஆக்கள் பல்குமிடம்.
பாலவா - பாலையுடைய ஆ. ஏறு - காளை. வேந்தன் : பிரச்சோதனன். காட்டுபு -
காட்டி. |