உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது |
|
ஓரிரு
பதின்மரை யாரமர்க்
கடந்து கோல்கொள
வென்ற கோபா
லகனைச் 45 சால்புளிப்
பயந்த சாயாக்
கற்பின் நீல
வேற்க ணிரைதொடிக் கீகெனப்
|
|
(கோபாலகன் தாய்க்கு விடுத்த
மகளிர்)
43 - 46 :
ஓரிரு........ஈகென
|
|
(பொழிப்புரை) ம்மகளிருள் இருபதின்மரைத்தான் கடத்தற்கரிய போரினைக் கடந்து செங்கோல்
கைக்கொள்ளும்படி வென்றுதவிய கோபாலகனை மாண்போடு ஈன்ற பிறழாத கற்பினையுடைய கரிய
வேல் போன்ற கண்ணை உடைய நிரல்பட்ட வளையலணிந்த தேவிக்கு அளித்திடுக! என்று கூறி;
என்க.
|
|
(விளக்கம்) கோல் - செங்கோல். கோபாலகன் :
பிரச்சோதனன் பட்டத்தேவியருள் ஒருத்தி மகன். சால்புளி - சால்போடு. இதன்கண் உளி
ஏழாவதன் சொல்லுருபு. அது, மூன்றாவதன் பொருளில் மயங்கிற்று. நிரைதொடி : கோபாலகன்
தாய்.
|