உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது |
|
பொற்கோங்
கேய்ப்ப நற்கல
னணிந்த முப்பதி
னிரட்டி முற்றிழை
மகளிரைப் பால
குமரற்குங் கோபா லகற்கும் 50
பால்வே றிவர்களைக் கொடுக்கெனப் பணித்து
|
|
(கோபாலகற்கும்
பாலகுமரற்கும் விடுத்த
மகளிர்) 47
- 50 :
பொன்.........பணித்து
|
|
(பொழிப்புரை) பொன்னிறப் பூக்களை நிரம்ப மலர்ந்த கோங்கமரம் போன்று நல்ல பொன்னணிகலன்களை
நிரம்ப அணிந்த அறுபது மகளிரைக் காட்டிப் பாலகுமரனுக்கும் கோபாலகனுக்கும் இவர்களைக்
கூறுபடுத்தி வழங்கிடுக! என்று கட்டளையிட்டு; என்க.
|
|
(விளக்கம்) பொற்கோங்கு - பொன்னிறப்பூப் பூத்த
கோங்கமரம். இது பொன்னணிகலன்களை நிரம்ப அணிந்த மகளிர்க்கு உவமை. "பூத்த
கோங்குபோல் பொன்சுமந்துளார்" எனவரும் சீவகசிந்தாமணியும் (419) காண்க. பாலகுமரன்
: பிரச்சோதனன் மகன். பால் வேறுபடுத்தி என்க. பால் -
கூறு
|