பக்கம் எண் :

பக்கம் எண்:736

உரை
 
4. வத்தவ காண்டம்
 
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
 
          முற்பாற் கூறிய வெற்பினுட் பிறந்த
          எட்டுநூ றாயிர மெரிபுரை சுவணம்
          பட்டாங் கிவற்றைப் பரதகற் கீகென
 
              (பரதகனுக்கு அளித்த பொருள்கள்)
                   51 - 53 : முன்பாற்.......என
 
(பொழிப்புரை) முன்னே கூறப்பட்ட அயிராவத மலையில் தோன்றிய தீப்பிழம்பு போன்ற எண்ணூறாயிரம் பொன்னைச் சுட்டி இவற்றை இயல்பாகவே பரதகனுக்கு அளித்துவிடுக என்று கூறி; என்க.
 
(விளக்கம்) முற்பாற் கூறிய என்றது இக்காதையில் முன்னே கூறிய அயிராவதமலை என்றவாறு. 21 ஆம் அடியைக் காண்க. சுவணம் - சிங்கச் சுவணம் என்னும் பொன். எரி - தீ. பட்டாங்கு - இயல்பாக. பரதகன் : பிரச்சோதனன் அமைச்சருள் ஒருவன்.