பக்கம் எண் :

பக்கம் எண்:737

உரை
 
4. வத்தவ காண்டம்
 
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
 
         மற்றவன் றம்பியர்க் கத்துணைப் போக்கிப்
  55     பதினா றாயிரஞ் சிவேதற் கீத்துப்
         பிறவு மின்னவை பெறுவோர்க் கருளி
 
        (அவன் தம்பிக்கும் சிவேதனுக்கும் அளித்த பொருள்கள்)
                 54 - 56 : மற்றவன்...................அருளி
 
(பொழிப்புரை) பின்னரும் அப்பரதகன் தம்பிமாருக்கும் எண்ணூறாயிரம் பொன்களைப் பகுத்து வழங்குக! என்று சொல்லி விடுத்துச் சிவேதன் என்னும் அமைச்சனுக்குப் பதினாறாயிரம் பொன்களை வழங்கி மேலும் இத்தகைய பொருள்களைப் பெறத் தகுந்தோர் பிறர்க்கும் வழங்கி; என்க.
 
(விளக்கம்) மற்றவன் : பரதகன். அத்துணை - அவ்வளவு. எண்ணூறாயிரம் பொன் - பதினாறாயிரம் சிங்கச் சுவணப் பொன் என்க. சிவேதன் : பிரச்சோதனன் முதலமைச்சன். பெறுவோர் பிறர்க்கும் அருளி என்க.