பக்கம் எண் :

பக்கம் எண்:739

உரை
 
4. வத்தவ காண்டம்
 
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
 
         வினைமேம் படூஉ மேற்றசை நாளுள்
         நிகழ்ந்த நன்னா ளறிந்தனர் கொடுப்ப
         அப்பா லவர்களைப் போக்கி யிப்பால்
 
            (யூகி முதலியோரை விடுத்தல்)
            61 - 63: வினைமேம்............இப்பால்
 
(பொழிப்புரை) மேற்கொண்டு செல்லும் காரியம் நன்கு நிறைவேறி மேம்பாடுறுதற்குக் காரணமான மேலான கோளியக்கமுடைய நாள்களுள் வைத்து அப்பொழுது நிகழ்ந்த நல்லதொரு நாளினைக் கணிகள் ஆராய்ந்தறிந்து குறித்துக் கொடுப்ப அந்த நாளிலே யூகி முதலியோரை உஞ்சை நகரத்திற்குப் புறப்படச் செய்த பின்னர்; என்க.
 
(விளக்கம்) வினை - எடுத்துக் கொண்ட காரியம். மேற்றசை - மேலான கோளியக்கம். அவை சோதிட நூலுள் சூரியதசை, சந்திரதசை என்பன முதலாகக் கூறப்படுவன. நாளுள் நிகழ்ந்த நல்நாள் என்பதற்கு நாளில் நிகழ்ந்த நன்முழுத்தம் எனினுமாம். அப்பால் இப்பால் என்பன அங்கு இங்கு என்று இடஞ்சுட்டி நின்றன.