| உரை | 
|   | 
| 4. வத்தவ காண்டம் | 
|   | 
| 11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது | 
|   | 
         வினைமேம் படூஉ 
      மேற்றசை நாளுள்          நிகழ்ந்த 
      நன்னா ளறிந்தனர் 
      கொடுப்ப          அப்பா 
      லவர்களைப் போக்கி யிப்பால்
 | 
|   | 
            (யூகி முதலியோரை 
      விடுத்தல்)             
      61 - 63: 
      வினைமேம்............இப்பால்
 | 
|   | 
| (பொழிப்புரை)  மேற்கொண்டு செல்லும் காரியம் நன்கு நிறைவேறி மேம்பாடுறுதற்குக் காரணமான மேலான 
      கோளியக்கமுடைய நாள்களுள் வைத்து அப்பொழுது நிகழ்ந்த நல்லதொரு நாளினைக் கணிகள் 
      ஆராய்ந்தறிந்து குறித்துக் கொடுப்ப அந்த நாளிலே யூகி முதலியோரை உஞ்சை 
      நகரத்திற்குப் புறப்படச் செய்த பின்னர்; என்க.
 | 
|   | 
| (விளக்கம்)  வினை - எடுத்துக் கொண்ட காரியம். மேற்றசை - 
      மேலான கோளியக்கம். அவை சோதிட நூலுள் சூரியதசை, சந்திரதசை என்பன முதலாகக் 
      கூறப்படுவன. நாளுள் நிகழ்ந்த நல்நாள் என்பதற்கு நாளில் நிகழ்ந்த நன்முழுத்தம் 
      எனினுமாம். அப்பால் இப்பால் என்பன அங்கு இங்கு என்று இடஞ்சுட்டி 
      நின்றன.
 
 |