உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது |
|
பழிப்பில் காரிகைப் பதுமா
பதியுமென் 85 றொண்டுணைக்
காத லொருதுணைத்
தேவியர்
முட்டில் செல்வமொடு முறைமையின் வழிபட |
|
(பதுமாபதி) 84
- 86 :
பழிப்பில்..........வழிபட |
|
(பொழிப்புரை) குற்றமற்ற அழகினையுடைய பதுமாபதியும் என்று கூறப்பட்ட ஒள்ளிய காதன்மிக்க ஒப்பற்ற
வாழ்க்கைத் துணைவியராகிய கோப்பெருந்தேவியர் இருவரும் முட்டுப்பாடில்லாத
செல்வத்தோடிருந்து தத்தமக்குரிய முறைமையினாலே தனக்கு வழிபாடு செய்யாநிற்ப;
என்க. |
|
(விளக்கம்) பழிப்பு - குற்றம் . காரிகை - அழகு, துணை -
வாழ்க்கைத்துணை. |