(விளக்கம்) அந்தரம் - வானுலகம். தேவிமாரோடும் இன்புறும்
இந்திரன்போல என்க. புலந்தும் - ஊடியும்.
"ஊடுதல் காமத்திற் கின்ப
மதற்கின்பம் கூடி முயங்கப்
பெறின்" (குறள். 1330)
என்பவாகலின் புலந்தும் புணர்ந்தும் என்றார். கழிப்பு - கழிதலை. ஆனாது -
ஒழியாது. நுகர்ப - நுகர்வர். அரசனும் தேவிமாரும் இங்ஙனம் நுகர்ப என்க.
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
முற்றிற்று
|