உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
12. பந்தடி கண்டது |
|
15 பந்தடி காணிய நிற்ப
விப்பால் வெங்கோ
லகற்றிய வென்றித்
தானைச் செங்கோற்
சேதிபன் செவிமுதற்
சென்று வயந்தக
னுரைக்கு நயந்தனை
யருளின் மற்றுநின்
றோழியர் பொற்றொடிப் பணைத்தோட் 20
டோழியர் தம்மோ டூழூ
ழிகலிப் பந்துவிளை
யாட்டுப் பரிந்தன ரதனாற்
|
|
(வயந்தகன் உதயணனுக்குக்
கூறுதல்) 15 - 21 :
இப்பால்................பரிந்தனர்
|
|
(பொழிப்புரை) இனி, இவ்விடத்தே ஆருணியைக் கொன்று அவனது கொடுங்கோலை அகற்றிய வெற்றியுடைய
படைகளையும் செங்கோலையும் உடைய உதயணமன்னன்பால் வயந்தகன் சென்று அவன் செவியின்கண்
கூறுவான் -- ''வேந்தே! நீ விரும்புவதுண்டாயின் கேட்டருள்க! நின்னுடைய வாழ்க்கைத்
துணைவியராகிய தேவிமார் இருவரும் பொன்னாலியன்ற வளையலையும் மூங்கில்போன்ற
தோள்களையுமுடைய தத்தம் தோழிமாரோடு சென்று அத்தோழிமாரை இருகூறுபடுத்தி அவர்,
மாறுபட்டு முறை முறையாகப் பந்து விளையாடுதலைக் காண்டற்கு விரும்பினர்;''
என்க.
|
|
(விளக்கம்) வெங்கோலகற்றிய என்றது ஆருணியைக் கொன்று அவனது
கொடுங்கோலை அகற்றிய என்பதுபட நின்றது. சேதிபன் - உதயணன். மறைச் செய்தி யாதலின்
செவியின்கண் உரைத்தல் வேண்டிற்று. தோழியர் - வாழ்க்கைத் துணைவியர் என்பதுபட
நின்றது. ஊழூழ் - முறையே முறையே. பரிந்தனர் -
விரும்பினர்.
|